Crime

திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட அரசு மருத்துவரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது தாயும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மேலப்புதூர் பகுதியில் செயல்படும், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவுத் தொடக்கப்பள்ளியில் 50 மாணவ, மணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 40 மாணவ, மணவகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிரேஸ் சகாயராணி (54). இவரது மகன் சாம்சன் டேனியல் (31), லால்குடி வட்டம் அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YwHupDE

Post a Comment

0 Comments