
சென்னை: இளம்பெண்ணைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்துவீசிய இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தாலுகாவைச் சேர்ந்தவர் தீபா (30). திருமணமாகாத இவர், சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ம்தேதி வெளியே சென்ற தீபா, பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, தீபா பயன்படுத்திய செல்போனின் லொகேஷன் துரைப்பாக்கத்தில் உள்ள குமரன் குடில் பகுதியைக் காட்டுவதை அறிந்த அவரது தம்பி வீரமணி,அங்கு சென்று தேடிப் பார்த்தும், சகோதரி தீபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வீரமணி புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a8pUbnr
0 Comments