
ஆக்ரா: மகாராஷ்டிராவில் ரூ.300 கோடி சுருட்டியவர் உத்தர பிரதேசம் விருந்தாவனில் சாதுவாக வாழ்ந்து வந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாபன் விஸ்வநாத் ஷிண்டே. முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி இவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஜீஜாவ் மாசாகிப் மல்டி ஸ்டேட் வங்கி என்ற கூட்டுறவு வங்கியின் 4 கிளைகளில் முதலீட்டு பணத்தை செலுத்தும்படி இவர் மக்களிடம் கூறியுள்ளார். இவர் மீது நம்பிக்கை வைத்து ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் முதலீட்டு பணம் ரூ.300 கோடியை சுருட்டிக் கொண்டு பாபன் விஸ்வநாத் ஷிண்டே கடந்தாண்டு தலைமறைவானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wRqcYDM
0 Comments