
சென்னை: நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் பயிற்சியாளர், நீச்சல் குள உரிமையாளர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே.பாலேகர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கிரித்திக் சபரிஸ்கர் (10). வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர். இவர் கொளத்தூர் அசோகா அவென்யூவில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sExAQl3
0 Comments