Crime

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து பரோலில் வெளிவந்து குடும்பத்துடன் தலைமறைவான கர்ணாவை 4 நாட்களுக்கு பிறகு கோவை அருகே போலீஸ் சிறப்புக் குழு கைது செய்துள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் கர்ணா. இவர் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த கொலையில் கைதாகி அந்த வழக்கில் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள், சிறை உடைப்பு உட்பட 20 குற்றவியல் வழக்குகள் உள்ளன. ஆயுள் தண்டனைக் கைதியான அவர் தனக்கு நன்னடத்தை விதிப்படி விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்தார். அதை புதுவை அரசு ஏற்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pkWmBuN

Post a Comment

0 Comments