Crime

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் கடந்த 24-ம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தினர். காரில் இருந்த கும்பல் தப்பியோடிவிட்டது.

காரை சோதனையிட்டபோது, தலா 50 ஆயிரம் மாத்திரைகள் கொண்ட 10 பண்டல்கள் இருந்தன.அவை வலி நிவாரணி மாத்திரைகள் என்று தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸார், அதை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zMLTgiD

Post a Comment

0 Comments