
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு ஆகியோரிடம் இருந்து ரூ.89 லட்சம் வசூலிக்க வேண்டும் என்று, ஜெயக்குமார் தனது மருமகனுக்கு எழுதியதாக மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எஸ்.பி.க்கு அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில், அவர் தனது மருமகன் ஜெபா மற்றும் குடும்பத்தினருக்கு எழுதியதாக 4 பக்க மற்றொரு கடிதம் நேற்று வெளியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EZPYQ7k
0 Comments