Crime

சிவகாசி: சிவகாசியில் தனியார் பேருந்து ஓட்டுநர் சுரேஷ் (38) கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற போது கட்டிடத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற டோனி(எ) பால கணேஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சுரேஷ்(36). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிவகாசி அருகே சுப்ரமணியபுரம் காலனி பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிவகாசி கிழக்கு போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். குற்றவாளிகள் நாரணாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M1cbWkU

Post a Comment

0 Comments