
சென்னை: மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், 13 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய இரண்டு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, இரண்டு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qPLaoSb
0 Comments