
கடலூர்: சேத்தியாத்தோப்பில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாராம் மனைவி கமலா (75). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கமலா தனது மகள் சித்ராவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்ரா தனது பேரனை பார்ப்பதற்காக கடந்த மாதம் சென்னைக்கு சென்றதால், கமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் எழுந்த கமலா, வீட்டு வேலைகளை செய்துவிட்டு காலை 7 மணிக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FEUpxWN
0 Comments