
சென்னை: மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் நிலையில், இளைஞரின் இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததால், வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனியார் பைக் டாக்ஸி வேலை செய்து வந்தார். சமீபத்தில் பாண்டி பஜார் சாலை வழியாக சூரியமூர்த்தி சென்று கொண்டிருந்தபோது, வாகன தணிக்கையில் இருந்த போலீஸார் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q6Ifxz5
0 Comments