
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியாரின் இல்லத்தில் கடந்த 20-ம் தேதி, அதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சேவியர் குமார்(45) கொலைசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக தக்கலை திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். பின்னர், ஜஸ்டின்ரோக், வின்சென்ட் ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A0yJpKU
0 Comments