
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 216.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டி ‘‘ஆபரேஷன் விடியல்’’ என்ற பெயரில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோயில் ஏரிக்கரை அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக இருதினங்களுக்கு முன்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெட்டப்பாக்கம் சரக ஆய்வாளர் கீர்த்திவர்மன் தலைமையிலான போலீஸார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த 3 பேர் போலீஸாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wMa95d6
0 Comments