Crime

புதுடெல்லி: காஷ்மீரின் பாரமுல்லா பகுதியைச் சேர்ந்தவர் மொகுத் ஷபி மிர் (72). ஒய்வுபெற்ற காவல் அதிகாரியான இவர், பாரமுல்லா பகுதியில் உள்ள மசூதியில் மவுலியாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மசூதிக்கு சென்ற மொகுத் ஷபி மிர்ரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து ஷபி மிர்ரின் தம்பி அப்துல் கரீம் மிர் கூறுகையில், ‘காலையில் ஸ்பீக்கரில் பாங்கு ஒலித்துக் கொண்டிருந்தபோது, பாதியில் சத்தம் நின்றது. மைக்ரோபோன் வேலை செய்யவில்லை என்று நினைத்தோம். பின்னர்தான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிந்தது’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a3uQ7Ct

Post a Comment

0 Comments