
மதுரை: பிஏசிஎல் நிதி நிறுவன மோசடியில் நீதிபதி லோதா குழு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த டி.வளன்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இந்தியா முழுவதும் பிஏசிஎல் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.49 கோடிக்கும் அதிக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது. முதலீட்டாளர்கள் பணத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பினாமி நிறுவனங்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் பிஏசிஎல் மோசடியை சிபிஐ விசாரிக்கவும், நிறுவன சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் 12.3.2013-ல் உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FGHxnXq
0 Comments