
சென்னை: சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் ஷூ கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை புதுபெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலையை சேர்ந்தவர் சிராஜீதின் (33). இவர் புது பெருங்களத்தூரில் உள்ள ஒரு ஷூ கடையில் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற சென்னை பர்மா பஜாருக்கு வந்து செல்வது வழக்கம். அந்தவகையில், சிராஜீதின் வழக்கம்போல பணத்தை பெற, சென்னை பர்மா பஜாருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அங்கு வாடிக்கையாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புது பெருங்களத்தூருக்கு மின்சார ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்குள் வந்துகொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கொண்ட மர்மநபர்கள் அங்கு வந்து, தாங்கள் காவல்துறையினர் என்று கூறி அவரது பையை பரிசோதித்தனர். அதில், ரூ.20லட்சம் பணம் இருந்தது. உடனே அந்த பணத்தை அவர்கள் எடுத்துச்சென்றபோது, அவர்களை சிராஜீதின் தடுத்தார். உடனே, அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 லட்சம் பணம் மற்றும் 2 கைப்பேசியை பறித்துக்கொண்டு சென்றபோது, தடுக்க முயன்ற சிராஜீதினை படிக்கட்டில் தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசில் சிராஜீதின் புகார் கொடுத்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக, அந்தப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NIkYMiE
0 Comments