
நாமக்கல்: நாமக்கல்லில் கவனக்குறைவாக காரின் கதவை திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அடுத்த வளையப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் விவசாயம் செய்து கொண்டு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 30-ம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனைவியுடன் தங்கியிருந்த சரவணன் 31-ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதற்காக நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eNdtI5j
0 Comments