Crime

கும்பகோணம்: கும்பகோணம் செக்காங்கண்ணியைச் சேர்ந்தவர் ஜான்பென்னி (49). ஓட்டுநர். இவரது மகன் பிரவீன்குமார்(22). இவரை வழிப்பறி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனிப்படை போலீஸார் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தனது மகனைப் பார்ப்பதற்காக ஜான்பென்னி நேற்று முன்தினம் மாலை காவல் நிலையம் சென்றார். ஆனால், பிரவீன்குமாரை பார்க்க போலீஸார் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த ஜான்பென்னி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rN2fLj5

Post a Comment

0 Comments