
சென்னை: சென்னை நொளம்பூரில் வசித்தவர் ஜெகன்(48). இவர் அதே பகுதி ரெட்டிபாளையம் சாலையில் மீன்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தபோது அங்கு வந்த 6 பேர் கும்பல் ஜெகனை வெட்டியது. இதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த நொளம்பூர் போலீஸார், ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அண்ணா நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் ரோகித்நாதன் ராஜகோபால், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் மேற்பார்வையில் நொளம்பூர் காவல் ஆய்வாளர் மில்லர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26UdquT
0 Comments