
மதுரை: நியோ - மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'நியோ-மேக்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் கிளைகளை ஏற்படுத்தி கூடுதல் வட்டி தருவதாக ஏராளமான முதலீடுகளை ஈர்த்தன. இதன்மூலம் பல கோடி ரூபாயை வசூலித்து, பிளாட், மருத்துவமனை, கல்லூரிகளை வாங்கி முறை கேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில், மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் 'நியோ மேக்ஸ்' மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மதுரை விராட்டிபத்து கமலக் கண்ணன் பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட முகவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் டிஎஸ்பி மணிஷா தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kTRSXpq
0 Comments