
சென்னை: சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைஅளித்தார். அதில், பகுதிநேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட நபர்கள் பின்னர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டனர்.
யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்தல், ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுதல் போன்ற எளிமையான டாஸ்க்குகளை வழங்கினர். அவர்கள் வழங்கிய டாஸ்க்குகளை முடித்த உடன் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைத்தது. இந்த ஆசையால் ரூ.12 லட்சத்து 22 ஆயிரத்தை நான் முதலீடு செய்தேன். அதை அவர்கள் வழங்கிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு இரட்டிப்பு பணமும் வரவில்லை, நான் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. அதன் பின்னரே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, என்னிடம் பகுதி நேர வேலை என பணமோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்’ என புகாரில் தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LhwuTdl
0 Comments