Crime

சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி கை, கால்களை கட்டி போட்டு 75 பவுன் நகை மற்றும் ரூ.3.50 லட்சம் பணத்தை சினிமா பாணியில் கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோழன் (66). இவரது மனைவி வனஜா (60). சோழன் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kFTeGvW

Post a Comment

0 Comments