
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையில் ரூ.82.17 லட்சம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி மின்துறையில் தலைமை அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக இருந்தவர் சண்முகசுந்தரம் (55). இவர் மின்கட்டணம் செலுத்துவோரிடமிருந்து வசூலிக்கும் பணத்தை மொத்தமாக வாங்கி வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2004 செப்டம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான ரூ.82 லட்சத்து 17ஆயிரத்து 143 ரூபாயை வங்கியில் செலுத்தாமலே ரசீதை மட்டும் தனது உயர் அதிகாரியான பெருமாளிடம் கொடுத்துள்ளார். பணம் செலுத்ததாது குறித்து 2005 ஆம் ஆண்டு பொது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qS85RLb
0 Comments