
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வேட்டவலத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண், கைபேசியை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார்.
கர்ப்பிணி எனக்கூறி, தேர்வு அறையில் இருந்து கழிப்பறைக்கு சென்றவர் 25 நிமிடங்களாக வராததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை சோதனையிட்டதில், வினாத்தாள் மற்றும் விடைத்தாளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கழிப்பறையில் கைபேசி இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xY7qn4e
0 Comments