
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பறக்கும்படை வட்டாட்சியர் வாகனத்தில்(ஜீப்) ஜிபிஎஸ் கருவியை பொருத்திய ஓட்டுநர் மற்றும் அரிசி கடத்தல்காரர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை வட்டாசியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவரது அரசு வாகன (ஜீப்) ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணகிரி அடுத்த பி.சி.புதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(59). இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின், ஆட்சியரின் ஓட்டுநராக பணியாற்றி, அங்கிருந்து பணி மாறுதல் செய்யபட்டு பறக்கும்படை வட்டாட்சியர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/asroWNg
0 Comments