
திருச்சி: திருச்சியில் 9.75 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தம்பதி உட்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதி வழியாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் அரசுப் பேருந்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன் பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்டகுழுவினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளையும் தீவிரமாக நோட்டமிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nGodatC
0 Comments