
மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மருத்துவக் கழிவுகளை அழிக்கும் கிடங்களில், மேற்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 577 கிலோ கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் வருவதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல்காரர்களை பிடித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sxjWQXm
0 Comments