
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பட்டப்பகலில் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறிபடி சிதறி ஓடினர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு, சொத்துக்காக கூலிப்படை மூலம் தாயே, மகனை கொலை செய்தார். இந்த கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட மதுரை திருமோகூரைச் சேர்ந்த வினீத் (29) என்பவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் காரைக்குடி தெற்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு காரில் தனது நண்பர்களுடன் காரைக்குடி வந்த வினீத், புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nlWkc8y
0 Comments