
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறிச் சென்றதால் சிதைந்த நிலையில் கிடப்பதாக ரோந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், வேடசந்தூர் போலீஸாருடன் பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு சென்றனர். பெண்ணின் சேலை, ஜாக்கெட் மட்டுமே அடையாளமாக தெரிந்தது. உடல் முழுவதும் இரவில் அடுத்தடுத்து வாகனங்கள் கடந்து சென்றதால் முற்றிலும் சிதைந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KtiJu1F
0 Comments