
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் இன்று (மே 6) நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
வேங்கைவயல் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் 26ம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணனை ஒரு நபர் ஆணையமாக நியமித்து உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kcILqn7
0 Comments