
விருத்தாசலம்: மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை திட்டக்குடி போலீஸார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த இடைச்செரு வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜயராஜ் (30). பொறியியல் பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டி ருந்தார். இவர் கடந்த 15-12-2021அன்று ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் ஆகியோரை அணு கினார். அப்போது அவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்தால் மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக குறிப்பிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EOBHoz1
0 Comments