
சேலம்: சேலத்தில், கணவரை கொன்றதாக கூறி சரணடைந்த மனைவியை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேலம் ஜாகிர்ரெட்டிப்பட்டி அருகே உள்ள ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (31), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு மணிமேகலை (28) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ரமேஷை, கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டதாகக் கூறி, அவரது மனைவி மணிமேகலை சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5kgrxSQ
0 Comments