
கோவை: கோவையில் மோசடி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 76 ஆயிரம் பேரின் விவரங்களை சேகரிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பீளமேட்டில் யுடிஎஸ் என்ற பெயரில் 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவந்த நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி, பல்வேறு திட்டங்களில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 76 ஆயிரம் பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில், அறிவித்தபடி பணத்தை தரவில்லை என முதலீட்டாளர்கள் பலர் புகார் அளித்தனர். நிறுவனமும் மூடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hJ6iL3G
0 Comments