
திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் மதிய உணவின் போது சிக்கன் அளவு குறைவாக உள்ளது என சிறைத் துறை அதிகாரியை மிரட்டியதாக கைதி ‘போலீஸ் பக்ருதீன்’ மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பயங்கரவாத வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் பக்ருதீன்’ என்பவர் திருவள்ளூர் மாவட்டம், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீஸ் பக்ருதீன் தனக்கு சிறையில் வழங்கப்பட்ட மதிய சாப்பாட்டில் சிக்கன் அளவு குறைவாக இருப்பதாக குறை கூறியதோடு மட்டுமில்லாமல், சிறைத் துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wFmtaoX
0 Comments