
சென்னை: சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்த 4 பேரிடம் போலி கைத்துப்பாக்கி, கோபுர கலசத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதி அறையில் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பதாக கோயம்பேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JHi83jo
0 Comments