
மதுரை: மதுரைக்கு பயிற்சிக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர் போலீஸார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பெண் பட்டதாரி. இவர் சிஏ படிக்கிறார். மதுரையில் நடந்த 2 நாள் சிஏ பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்க விமானம் மூலம் டிசம்பர் 17ல் மதுரை வந்தார். தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கினார். அப்போது, அதே கருத்தரங்கில் பங்கேற்க சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஜெயின் (22), காஞ்சிபுரம் மாடவாக்கத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன்(23) ஆகியோரும் மதுரைக்கு வந்தனர். இவர்களும் குஜராத் மாணவி தங்கிய விடுதியில் தங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AYQEjDv
0 Comments