Crime

ஈரோடு: ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (55). கிரானைட் தொழில் செய்து வருகிறார். மார்ச் 8-ம் தேதி கொல்கத்தாவுக்கு சென்ற மஞ்சுளா தேவி 15-ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் இருந்த 42 பவுன் தங்க நகை, ரூ. 6 லட்சம் மதிப்பிலான வைர நகை, ரூ 4.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. வீரப்பன்சத்திரம் போலீஸார் விசாரித்து, இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ManLQYK

Post a Comment

0 Comments