
கரூர்: செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனால் ஏற்பட்ட துக்கம் காரணமாக அரளி விதையை தின்று தாய் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியை அடுத்த சுண்டுகுழிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுமதி (44). இவர்களது மகன் செல்வராஜ் (23). பிஎஸ்சி பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் திரும்ப வேலைக்கு செல்லாமல் எப்பொதுழும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/17w4MBe
0 Comments