
சென்னை: தொழில் அதிபர் வீட்டில் 33பவுன் நகை, 57 கிலோ வெள்ளிதிருடப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் திருட்டு பைக்கில் வந்தபோது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார்.
சென்னை, வடபழனி, குமரன் காலனி, 2-வது தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சந்தோஷ்குமார் (65). தனியார் போட்டோ லேப் உரிமையாளரான இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 33 பவுன் நகைகள், 57 கிலோவெள்ளிப் பொருட்கள், ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rb9qgeL
0 Comments