Crime

நாகர்கோவில்: பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ பரவியதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் பல பெண்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த குடயால்விளையைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). பாதிரியாரான இவர் பினாங்காலை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oK3fgkn

Post a Comment

0 Comments