Crime

சிவகாசி: சிவகாசி அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரி என்பவருடன் திருமணம் நடை பெற்றது. மணிகண்டன் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் தனது உறவினரான முத்துராஜ்(38) என்பவரது உடல் ஊனம் குறித்து மணிகண்டன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. அப் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iYFu9at

Post a Comment

0 Comments