Crime

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் (48) என்பவர் மருத்துவம் படிக்காமல் அதேபகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி ஆங்கில முறைப்படி வைத்தியம் பார்த்து வருவது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eJHMNbP

Post a Comment

0 Comments