Crime

வேலூர்: வேலூர் அருகே காவல் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்ற இரண்டு பேர் சிக்கினர்.

வேலூர் மாவட்டம் அரியூர் காவல் துறையினர் ஆவாரம் பாளையம் கிராமத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை இருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZelAF9h

Post a Comment

0 Comments