Crime

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்துள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்தாண்டு இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகத்தில் வன்முறை ஏற்பட்டு பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் இறந்த மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தனது மகளின் மரணத்தி்ல் மர்மம் உள்ளதால் இந்த வழக்கை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி இறந்த மாணவியின் தாயாரும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mh7DcQ1

Post a Comment

0 Comments