Crime

கோவை: நிதி நிறுவனம் நடத்தி ரூ.74.41 லட்சம் மோசடி செய்த 6 பேருக்கு தலா 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டார்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் 'சன்ரேஸ் டிரேடிங் கார்பரேஷன்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார். இதில் முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத் அலி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி 3 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qvuUYzO

Post a Comment

0 Comments