
ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த படகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (65). இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஆலங்காயம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் உதயகுமாரின் உடலை மீட்டு, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
உதயகுமாரின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கையை வைத்து ஆலங்காயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s9wlaev
0 Comments