
வேலூர்: வேலூரில் சிவராத்திரி நாளன்று கோயிலுக்கு சென்றவர் வீட்டில் 11 பவுன் தங்க நகைகளை திருடிய இளைஞர், திருடும்போது அணிந்திருந்த குல்லாவுடன் மீண்டும் அதே வீட்டின் முன்பாக நடமாடியபோது காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் அடுத்த சித்தேரி குமரவேல் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு கடந்த 18-ம் தேதி (சிவராத்திரி) இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு அதிகாரலை 2 மணிக்கு வீடு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wgYDCzB
0 Comments