
திருச்சி: புலிவலத்தில் 4 நாட்களுக்கு முன்பு காணாமல்போன பெண்கள் இருவர் துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகேயுள்ள பகளவாடியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் மனைவி சம்பூர்ணம்(48), ராஜா மனைவி பெரியம்மாள்(45). நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும் கணவரை இழந்தவர்கள். கோயில்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்று வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5HRUlmn
0 Comments