
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே செந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி (26). இவரது கணவர் கெட்டூரைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டர் முத்துராஜ். இவர்களது மகன் ஜீவன் (4), மகள் பாவனா ஸ்ரீ (2). கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முத்துராஜ் இருந்துள்ளார்.
இதனால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட தகராறு காரணமாக, செந்தாரப்பள்ளியில்உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தை களுடன் கவுரி சென்றார். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட கவுரி, நேற்று முன்தினம் இரவு, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AGocpsd
0 Comments