
திருப்பூர்: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்லடம் இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த லோகேஷ்(21) என்பவருடன்காதல் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் லோகேஷை வலியுறுத்தி வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1VFXH2Q
0 Comments